26 March 2014

காதல் கடிதம் 2


என் அசட்டு காதலியே!!


உன் கடிதம் கண்டேன்...
காதல் கண்டேன்....
போதை கொண்ட வண்டானேன்
வேழம் கொன்ற வேந்தனானேன்
சோழம் கண்ட ராஜ ராஜனானேன்
கட்டியணைத்து கொள்ள
என் ஆண்மை துடித்தது...
தாண்டி சென்றேன் கலாச்சார சுழலில்
சிக்கிய காகிதமாய்...
ஆனால் உன் ஒவ்வொரு
வார்த்தையும் எனக்குள் ஓடி திரிகிறது
உதிரத்தில் கலந்து..
பேராசை வந்தது எனக்கு
இன்னொரு தடவை உன் அஞ்சல் காணும் ஆவலில்
இருபது தாள் கசக்கியெறிந்து
விட்டேன்,
என்னால் உனக்கு நிகராக ஒரு
சொல் கூட இயலவில்லை..
மறு படி எனக்கொரு கடிதம் எழுது காதலியே
உன் மக்கு காதலன் கற்று கொள்வேன்.

No comments:

Post a Comment