24 September 2010

முரண்கள்


எரி மலையும்
பனி மலையும்
ஒரே பூமியில்

சுடும் வெயிலும்
கடும் குளிரும்
ஒரே நாளில்

வன் முள்ளும்
மென் மலரும்
ஒரே செடியில்

பணக்காரனும்
பிச்சைகாரனும்
ஒரே தெருவில்

கடவுளும்
கல்லும்
ஒரே சிலையில்

சேறும்
தாமரையும்
ஒரே குளத்தில்

காந்தியும்
கோட்சேயும்
ஒரே நாட்டில்

கண்ணீரும்
புன்னகையும்
ஒரே வாழ்க்கையில்

முரண்களுக்குள் மட்டும்
முரண்கள் இல்லை