07 July 2010

சந்தித்தோம்


அதே நானும் அதே நீயும்
இன்னும் ஒரு தடவை

அதே பேருந்து பயணத்தில்…
அதே எதிர் இருக்கைகளில்…
அதே மௌனத்தில் நான்…
அதே விளங்காத வேதனையில் நீ….
நம் கடைசி சந்திப்பை போல….

ஆனாலும் ஒரு வித்தியாசம்…
இன்று
என்னருகில் என் கணவன்…
உன்னருகில் உன் மனைவி….
முள்வேலியாய் நம் காதல்...

காத்திருக்கிறேன்



உன் இமைகள் கவிழ்கையில்
உன் இதழ்கள் மலர்கையில்
உன் கன்னம் குழைகையில்
உன் வார்த்தைகள் முற்று காணாது மௌனிக்கையில்
உன் பார்வை தழைய மறுக்கையில்
தெரிந்து கொண்டேன் நீயும் என்னை காதலிக்கிறாய் என்பதை
ஆனால் உன் நாவினாலும் சொல்லிவிடு
காதலியே...