07 July 2010

காத்திருக்கிறேன்



உன் இமைகள் கவிழ்கையில்
உன் இதழ்கள் மலர்கையில்
உன் கன்னம் குழைகையில்
உன் வார்த்தைகள் முற்று காணாது மௌனிக்கையில்
உன் பார்வை தழைய மறுக்கையில்
தெரிந்து கொண்டேன் நீயும் என்னை காதலிக்கிறாய் என்பதை
ஆனால் உன் நாவினாலும் சொல்லிவிடு
காதலியே...

No comments:

Post a Comment