07 July 2010

சந்தித்தோம்


அதே நானும் அதே நீயும்
இன்னும் ஒரு தடவை

அதே பேருந்து பயணத்தில்…
அதே எதிர் இருக்கைகளில்…
அதே மௌனத்தில் நான்…
அதே விளங்காத வேதனையில் நீ….
நம் கடைசி சந்திப்பை போல….

ஆனாலும் ஒரு வித்தியாசம்…
இன்று
என்னருகில் என் கணவன்…
உன்னருகில் உன் மனைவி….
முள்வேலியாய் நம் காதல்...

No comments:

Post a Comment